பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்துக்கு ஒத்திவைப்பு: போர் பதற்றம் காரணமாக பி.சி.சி.ஐ., முடிவு

மும்பை: இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் நிலவி வரும் நிலையில், நடப்பு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரைஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
@1brஇந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதட்டம் உச்சத்தை எட்டியுள்ளது. எல்லையோர மாநிலங்களில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில், பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது, பொதுமக்களில் ஒரு பிரிவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த தொடரில் மொத்தம் நடக்க வேண்டிய 74 போட்டிகளில் 58 ஆட்டங்கள் முடிவடைந்து விட்டன. நேற்று, தரம்சாலாவில் டில்லி, பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும், ரசிகர்கள் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக, பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து (2)
Vasan - ,இந்தியா
09 மே,2025 - 16:24 Report Abuse

0
0
Reply
theruvasagan - ,
09 மே,2025 - 16:07 Report Abuse

0
0
Reply
மேலும்
-
24 விமான நிலையங்களை மே 15 வரை மூட மத்திய அரசு உத்தரவு
-
கடலில் வெடி வைத்து மீன் பிடித்த வழக்கில் இருவருக்கு 3 ஆண்டு சிறை
-
நிலத்தை அளக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர், கிராம உதவியாளர் கைது
-
இலங்கையில் ஹெலிகாப்டர் விபத்து 6 பேர் பலி
-
போர் பதற்றம் எதிரொலி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர் விடுமுறை ரத்து
-
காஷ்மீரில் 2வது நாளாக டிரோனை ஏவிய பாக்.,: தாக்கி அழித்தது இந்தியா
Advertisement
Advertisement