நிலத்தை அளக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர், கிராம உதவியாளர் கைது

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் நிலத்தை அளந்து சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் மேல தெருவை சேர்ந்தவர் பத்மநாபன்(71). ஓய்வு பெறற ஆசிரியர். இவருக்கு சொந்தமான நிலத்தை அளக்க அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.இது தொடர்பாக நீண்டகரை கிராம உதவியாளர் ராஜாவை தொடர்பு கொண்ட போது, நிலத்தை அளந்து சான்று தர ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் அளிக்க விரும்பாத ஸ்ரீபத்மநாபன், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். டிஎஸ்பி சால்வன் துரை ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் மதிப்பு நோட்டுகளை சர்வேயர் முகமது அஜ்மல் கான் மற்றும் ராஜாவிடம் ஸ்ரீபத்மநாபன் கொடுத்தார். அதனை வாங்கிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும்
-
ரூ.7 ஆயிரம் சம்பளத்தில் பணிவாய்ப்பு பெறுவதற்கு ரூ.7 லட்சம்பே! அங்கன்வாடி பணிக்கு உயர்கல்வி முடித்தோரும் மனு
-
ஒன்றியங்கள் பிரிப்பு விவகாரம்: தி.மு.க., நிர்வாகிகள் எதிர்ப்பு
-
தி.மு.க.,வுக்கு சென்ற கிறிஸ்துவ ஓட்டு; விஜய் பக்கம் திருப்பிவிட முயற்சி
-
ஒவ்வொருவரையும் உற்று நோக்குவேன்: நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
-
பாகிஸ்தான் ராணுவ தளங்களை கதறவிட்ட ஏ.டி.ஜி.எம்.,
-
வர்ராரு.. வர்ராரு.. அழகரு வர்ராரு... களை கட்டுகிறது கள்ளழகர் கோயில்