சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்

சென்னை: சென்னை மற்றும் வேலூரில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் ரூ.4.73 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் தொடர்பாக, சுற்றுச்சூழல் துறை முன்னாள் அதிகாரி பாண்டியன் மற்றும் தொழில் அதிபர்கள்மீது, அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக, கடந்த மூன்று நாட்களாக, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாண்டியன் வீடு, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி தெற்கு மாட தெருவில் உள்ள தொழிலதிபர் வீடு, சென்னை கே.கே.நகரில் டாக்டர் வீடு, கோயம்பேடு பகுதியில், தொழில் அதிபர் வீடு உட்பட, 10 இடங்களில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். வேலூரிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
இந்நிலையில் அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாண்டியன் மற்றும் சிலர் வீடுகளில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.4.73 கோடி ரொக்கம், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும்
-
வரும் 12ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்
-
'அத்திக்கடவு -- அவிநாசி திட்டம் பல்லடம் வரை நீட்டிக்க வேண்டும்' விவசாயிகள் வலியுறுத்தல்
-
பத்தாம் வகுப்பு தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்; தலைமையாசிரியர்கள் நம்பிக்கை
-
ஆற்காடுகுப்பம் அரசு பள்ளியில் பிளஸ் 2வில் 18 சதவிகிதம் தேர்ச்சி குறைவு பெற்றோர் அதிர்ச்சி
-
அனுமதியின்றி நில அளவீடு தாசில்தார் மீது குற்றச்சாட்டு
-
அமைப்புசாரா தொழிலாளருக்கு இதுவரை ரூ.50 கோடிக்கு உதவி