தினமலர் செய்தி எதிரொலி பயன்பாட்டிற்கு வந்த குடிநீர் மையம்

சென்னை, சென்னையின் முக்கிய சுற்றுலா தலமான மெரினா கடற்கரைக்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போது, பள்ளி, கல்லுாரிகள் விடுமுறை என்பதால், வழக்கத்தைவிட மக்கள் வரத்து அதிகமாக உள்ளது.
இந்நிலையில், கடற்கரையில் நான்கு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள், செயல்படாமல் முடங்கி கிடந்தன. இதனால் அங்குள்ள கடைகளில் கூடுதல் விலைக்கு தரமற்ற குடிநீரை வாங்கி பருகும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து நமது நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது. அதை தொடர்ந்து, குடிநீர் மையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாட்ஸ் அப் மூலம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் ஆர்டர்; பெண் டாக்டர் கைது
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பொதுமக்கள் பீதி
-
பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி காவிரி ஆற்றில் சடலமாக கண்டெடுப்பு!
-
சென்னையில் பங்களா வீட்டில் தீ; வயதான தம்பதி பலி
-
மே 14,15ம் தேதி 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் கணிப்பு
-
பார்லி சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல், கார்கே கடிதம்
Advertisement
Advertisement