திறந்தவெளி கிணறுக்கு மூடி அமைக்க கோரிக்கை

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வட்டம்பாக்கம் ஊராட்சி பெருமாள் கோவில் தெருவில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடியிருப்புகளுக்கு அருகே, தனியாருக்கு சொந்தமான இடத்தில் கிணறு உள்ளது. பயன்பாடு இல்லாத இந்த கிணறு பாதுகாப்பு மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது.
கிணற்றின் அருகில் விளையாடும் அப்பகுதி குழந்தைகள் தவறி விழுந்து, அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, குழந்தைகள் பாதுகாப்பு கருதி, கிணற்றின் மேல்பகுதியில் பாதுகாப்பு மூடி அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் பலி: உறுதி செய்தது ராணுவம்
-
பாகிஸ்தானும் பயங்கரவாதமும்... ஆதாரத்துடன் ஐ.நா.,வை நாடும் இந்தியா!
-
நேபாளத்திற்கு 15 மின்சார வாகனம்; பரிசளித்தது இந்தியா
-
டில்லியில் இன்றும் 100 விமானங்கள் ரத்து
-
இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தம் மகிழ்ச்சி அளிக்கிறது: புதிய போப் முதல் உரை!
-
கேரளாவில் கார், டெம்போ மோதி கோர விபத்து: காரில் வந்த 4 பேர் உடல்நசுங்கி பலி
Advertisement
Advertisement