அறிவிக்கப்படாத மின் வெட்டு

வால்பாறை, : அறிவிக்கப்படாத மின் வெட்டால், வால்பாறை மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு, அய்யர்பாடி துணை மின் நிலையத்தின் வாயிலாக, நாள் தோறும் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் முன் அறிவிப்பின்றி பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. இதனால் வால்பாறை மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இப்பிரச்னைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement