சித்திரை திருவிழாவில் 'கியூ ஆர் கோடு'

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி இன்று (மே 11) கள்ளழகர் எதிர்சேவை, நாளை வைகை ஆற்றில் எழுந்தருளல் நடக்கிறது. மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ், குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வசதிகளின் இருப்பிடம் குறித்து அறிய 'கியூ.ஆர். கோடு'வை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. ஆங்காங்கே 'ஸ்கேன்' செய்து பக்தர்கள் பயன் பெறலாம். புகார், சந்தேகம் தொடர்பாக 78716 61787ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement