'கொடை'யில் சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் : தரைப்பகுதியில் வெளுத்து வாங்கும் கோடை வெயிலை சமாளிக்க குளு குளு நகரான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் முகாமிட்டு வருகின்றனர். காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தரையிறங்கிய மேகக் கூட்டம் என ரம்யமான கால நிலை நிலவியது. இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ்வாக் , வனச் சுற்றுலாதலங்கள், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட பகுதிகளை பயணிகள் ரசித்தனர். ஏரி சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Advertisement