மாடுகளை கையில் பிடித்து செல்லும் போட்டி

காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள தளக்காவூர் உசுலாவடிக் கருப்பர், நாச்சியமத்தாள் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாடுகளை கையில் பிடித்து செல்லும் போட்டி நேற்று நடந்தது. இதில் 6 மாடுகள் கலந்து கொண்டன.

தளக்காவூரிலிருந்து மாடுகளை ஓட்டிச் சென்று மானகிரி அப்பல்லோ மருத்துவமனை வரை சென்று திரும்பினர். வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

Advertisement