ஒரகடத்தில் அதிகரிக்கும் விளம்பர பேனர்கள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுப்புறத்தில் தொழிற்சாலை அதிகரிப்பால், இந்த சாலையில் போக்குவரத்து மேலும் பல மடங்கு அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையோரம் உள்ள கட்டடங்களின் மீதும், அருகே உள்ள இடங்களில் ஏராளமான ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதனால், வாகன ஓட்டிகள் கவன சிதறல் ஏற்பட்டு அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும், பலத்த காற்று அடிக்கும் போது கட்டடங்களில் உள்ள இந்த பேனர்கள் சாலையில் விழுவதால் விபத்தும் ஏற்படுகிறது.
எனவே, அனுமதியின்றி நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
பறக்க விடப்பட்ட வெள்ளைக்கொடி; வரியை குறைத்த அமெரிக்கா, சீனா
-
'சோலார் எனர்ஜி தலைவர் டிஸ்மிஸ் அதானி நிறுவன ஊழலை மறைக்காது'
-
டிரெய்லர் மீது சரக்கு லாரி மோதியதில் 4 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி
-
அதிகளவில் தானியங்கள் இருப்பு; ரேஷனை கூடுதலாக்க திட்டம்
-
போர் பதற்றத்தால் மூடப்பட்ட விமான நிலையங்கள் திறப்பு
-
காமன் கோவிலில் பவுர்ணமி உற்சவம்