நடைபாதையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பையால் அசுத்தம்

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி சிப்காட் செல்லும் அண்ணா சாலை பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இங்கு உள்ள தொழிற்சாலைகளுக்கு பலரும் இந்த சாலை வழியாக நடந்து சென்று வருகின்றனர். இந்த சாலையை ஒட்டி மாநில வன ஆராய்ச்சி நிலையம் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.
இங்கு சுற்றியுள்ள வீடுகள் மற்றும் வணிக கட்டங்களில் இருந்து சேகாரமாகும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவு கொட்டப்பட்டு வருகிறது.
இதை மாடுகள், தெருநாய்கள் கிளறுவதால் குப்பை காற்றில் பறந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்வராயன்மலையில் கோடை விழா நடத்தப்படுமா? கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள் மீது மக்கள் அதிருப்தி
-
'மிஸ் கூவாகம்' கள்ளக்குறிச்சியில் நடத்த எதிர்பார்ப்பு
-
கூத்தாண்டவர் கோவில் திருவிழா; 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
-
கண்ணகி கோயிலை தமிழக அரசு எடுக்க வேண்டும் -பா.ஜ., பெருங்கோட்ட பொறுப்பாளர் வலியுறுத்தல்
-
கள்ளக்குறிச்சியில் டி.ஆர்.ஓ.,விடம் மனு
-
தி.மு.க., பொதுக்கூட்டம்
Advertisement
Advertisement