காட்டுப்பன்றி வேட்டை ரூ.2.50 லட்சம் அபராதம்
சேலம்: சேலம் சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர், சிவதாரபுரம் அருகே நேற்று ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது வந்த, 5 பேரை பிடித்து விசாரித்ததில், காட்டுப்பன்றியை வேட்டையாடி அதன் இறைச்-சியை விற்க முயன்றதும், பெருமாம்பட்டியை சேர்ந்த சிவா, 29, மோகனவேல், 31, ஆனந்த், 39, பழனிசாமி, 33, மோகன்ராஜ், 36, என்பதும் தெரிந்தது. 5 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்-பட்டது. அவர்களுக்கு, வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவி, தலா, 50,000 வீதம், 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். பின் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement