ஆசிரியர்கள் பணி நிறைவு ராசிபுரத்தில் பாராட்டு விழா

ராசிபுரம்: ராசிபுரம் யூனியனுக்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணியாற்றி, பணி நிறைவுபெறும் இருபால் ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில் பாராட்டு விழா நடந்தது.

நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பச்சமுத்து, வட்டார கல்வி அலுவலர் அருள்மணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். ராசிபுரம் யூனியனுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

Advertisement