பலத்த காற்று வீசியதால் மரம் சாய்ந்து மின் கம்பங்கள் சேதம்
ஓமலுார் :ஓமலுார் அருகே, தொளசம்பட்டியில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்தது. இந்த காற்றால், தொளசம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே அரசமரத்து விநாயகர் கோவிலில் இருந்த, 300 ஆண்டு பழமையான அரசமரம் கீழே சாய்ந்து விபத்துக்குள்ளானது. மரக்கிளைகள் அதன் அருகில் இருந்த மின் கம்பங்கள் மீது விழுந்ததில், அருகே அடுத்தடுத்து தேர் செல்லும் ராஜவீதியில் இருந்த, ஒன்பது மின்கம்பங்கள் முறிந்து சேதமானது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மின்கம்பங்கள் சேதமானதையடுத்து, அப்பகுதி முழுதும் இருட்டாக மாறியது. கீழே சாய்ந்த மரத்தினை அகற்றி, மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
-
தங்கம் விலை நேற்று ரூ.2,360 சரிவு; இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு!
-
"நீங்கள் எங்க ஹீரோ அங்கிள்" - பிரதமருக்கு நன்றி சொன்ன இமாம் பேரன்
-
பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு
-
இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி
Advertisement
Advertisement