சித்திரை திருவிழாவில் 31 பவுன் செயின் திருட்டு
பரமக்குடி : பரமக்குடி சித்திரை திருவிழாவில் பெண்ணிடம் 31 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் வெளிநாட்டில் இருந்து தற்போதுஊருக்கு வந்துள்ளார்.
இவரது மனைவி ராதா 60. இருவரும் சித்திரை திருவிழாவை காண்பதற்காக வைகை ஆற்றுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தனர்.
நேற்று அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்கியதும் சாமி கும்பிட்டு விட்டு டூவீலரில் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அப்போது ஆற்றுப்பாலம் அருகே அன்னதானம் வாங்குவதற்காக ராதா சென்றுள்ளார். வாங்கிவிட்டு திரும்பி வந்தபோது கழுத்தில் அணிந்திருந்த தாலி உள்ளிட்ட செயின் 31 பவுன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
திருடியது யார் என்பது தெரியவில்லை. பரமக்குடி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
-
தங்கம் விலை நேற்று ரூ.2,360 சரிவு; இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு!
-
" நீங்கள் எங்க ஹீரோ அங்கிள் " - பிரதமருக்கு நன்றி சொன்ன இமாம் பேரன்
-
பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு
-
இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி
-
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி; 6 பேர் கவலைக்கிடம்