பைக் திருடியவர் கைது

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர் பைக் திருட்டு நடந்து வந்தது. நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன், சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு பைக் திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
நேற்று மடுகரையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், கடலுார் மாவட்டம், பண்ருட்டி கொரத்தி பகுதியைச் சேர்ந்த அருண்பிரகாஷ், 36, என்பதும், அவர் ஒட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரிய வந்தது.
இதேபோல் கரியமாணிக்கம் சுடுகாட்டு பகுதியில் நிறுத்தி இருந்த பைக்கை திருடியதையும் ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து 1 லட்சம் மதிப்பிலான இரண்டு பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர், மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரிப்பு
-
துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை சரிவு
-
சிந்து நதியை திறந்துவிடுங்க... இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்
-
ஏரியில் மூழ்கி சிறுவர்கள் 5 பேர் பலி; ஆந்திராவில் சோகம்
-
பஸ்ஸில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு; கண்டக்டர், டிரைவர் தற்காலிக பணிநீக்கம்
-
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது; கேரளாவில் ரூ40 கோடி கஞ்சா பறிமுதல்
Advertisement
Advertisement