இன்ஜினியர்கள் ஆர்ப்பாட்டம் 

கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் மாவட்ட கட்டடப் பொறியாளர்கள் சங்கம் மற்றும் கட்டுமான அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். கட்டட பொறியாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் தாயுமானவன், மண்டலத் தலைவர்கள் வேணுகோபால், சிவக்குமார் கண்டன உரையாற்றினர். சங்க நிர்வாகிகள் பொன்னிவளவன், பாலமுரளிதரன், சசிக்குமார், சுரேஷ்குமார், குமார், முத்துசாமி. சபரிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

எம்.சாண்ட், பி.சாண்ட், கருங்கல் ஜல்லி விலைகளை அரசு குறைக்க வேண்டும். அரசு தரமான கல்குவாரி பொருள்களை நியாயமான விலைக்கு விற்க வேண்டும். ஆற்று மணல் குவாரிகளை திறக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களை அத்திவாசிய பொருள்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Advertisement