வாய்க்காலில் மூழ்கி பஸ் டிரைவர் பலி
பல்லடம்; பல்லடம், மாணிக்காபுரத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் பத்மநாபன், 29; தனியார் பஸ் டிரைவர். நேற்று முன்தினம் மதியம், பல்லடம்,- மாணிக்காபுரம் ரோட்டில் உள்ள, பி.ஏ.பி., வாய்க்காலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். இரவு வரை வீடு திரும்பாத நிலையில், குடும்பத்தினர் அவரைத் தேடி வந்துள்ளனர். நேற்று, பல்லடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரித்து வந்த நிலையில், பத்மநாபன் குளிக்கச் சென்றதாக கூறப்பட்ட வாய்க்காலில், 700 மீ., தொலைவில், சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, சடலம் வெளியே எடுக்கப்பட்டது.
விசாரிக்கையில், அது, குளிக்கச் சென்ற பத்மநாபனின் உடல் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். உடல், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பல்லடம் போலீசார் இது குறித்து கூடுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!
-
பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'