கடலுார் தாலுகாவில் ஜமாபந்தி துவக்கம்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களிலும் 1434ம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் நேற்று துவங்கியது.

கடலுார் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., அபிநயா தலைமை தாங்கி மனுக்கள் பெற்றார்.

தாசில்தார் மகேஷ், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் சையது அபுதாகீர், குடிமைப் பொருள் தாசில்தார் ஜெயக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சதீஷ், ஆதிதிராவிடநலத்துறை தனி தாசில்தார் அமர்நாத் உடனிருந்தனர்.

முதல் நாளான நேற்று மனைப்பட்டா உட்பட பல்வேறு வகையான 101 மனுக்கள் பெறப்பட்டன.

Advertisement