வரும் 18ல் கோவையில் மாநில மகளிர் மாநாடு

கோவை,; தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மகளிர் மாநாடு, வரும் 18ம் தேதி கோவையில் நடக்கிறது.

கோவை பீளமேடு, ஹோப் காலேஜ் மணி மஹாலில், காலை 10:00 மணியளவில் துவங்கும் நிகழ்ச்சியில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொது செயலர் வெங்கடாச்சலம், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் வைரப்பன் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

கூட்டுறவு வங்கிகளில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து, 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்க உள்ளனர்.

Advertisement