துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை :சென்னை மாநகராட்சியில், 11 மண்டலங்களில் குப்பை கையாளும் பணியை, தனியார் நிறுவனங்களிடம் மாநகராட்சி ஒப்படைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களிலும் குப்பை கையாளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதைக்கண்டித்து, சென்னை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், செங்கொடி சங்கத்தினர், ரிப்பன் மாளிகையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தி.மு.க., ஆட்சியில் அளித்த வாக்குறுதிப்படி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Advertisement