திருமங்கலத்தில் ரூ.44 லட்சத்தில் புதிய ஊராட்சி அலுவலகம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் திருமங்கலம் ஊராட்சி உள்ளது. சுங்குவார்சத்திரம் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், திருமங்கலம் ஊராட்சி அலுவலகம் இயங்கி வந்தது. 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடத்தின் கூரை சேதமடைந்து, சுவர்கள் விரிசல் ஏற்பட்டது.
மேலும், மழை நேரங்களில், மழைநீர் கசிந்து அலுவலகத்தின் உள்ளே தேங்குவதால், ஆவணங்களை பராமரிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து, பழைய கட்டடத்தை அகற்றி, புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 44 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது.
எட்டு மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்புக்கான மக்களை 'பதம் பார்க்கும்' தீர்மானம்! வைப்புத்தொகை, மாத கட்டணம் உயர்கிறது; தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் 'கப் - சிப்'
-
பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறிப்பு
-
தமிழகத்தில் நான்கரை மாதங்களில் நாய்க்கடியால் 2.16 லட்சம் பேர் பாதிப்பு
-
பட்டா கேட்டு முற்றுகை யிட்ட மக்கள்
-
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கண்டிப்பு - ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
-
வீரபாண்டி சித்திரை திருவிழா ஊர் பொங்கலுடன் நிறைவு
Advertisement
Advertisement