புதுச்சேரி வீரர்கள் டாமன் டையூ பயணம்
புதுச்சேரி: டாமன் டையூவில் நடைபெறும் தேசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளில் புதுச்சேரி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டு திருவிழா வரும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை டாமன் டையூவில் நடைபெறுகிறது. இதில் பீச் வாலிபால், பென்கா சிலாட் மற்றும் செபக் டக்ரா போட்டிகளில் புதுச்சேரி மாநிலம் சார்பில் வீரர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான தேர்வு போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. அதில், பீச் வாலிபால் போட்டிக்கு ஆண், பெண் இரு அணிகளுக்கும் தலா 4 பேரும், பென்கா சிலாட் போட்டியில் 3 பெண்களும், செபக் டக்ரா போட்டிக்கு 3 ஆண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த 14 பேரும், பயிற்சியாளர்கள் மற்றும் அணி மேலாளர் ஆகியோருடன் நாளை புதுச்சேரியில் இருந்து டாமன் டையூவிற்கு புறப்படுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
-
இந்தியா- மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி
-
பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியதால் அரசுக்கு ரூ.33,000 கோடி வருவாய்
-
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை சிறப்பாக இருந்தது: ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று துவக்கம்
-
6,000 பேர் பணி நீக்கம்: மைக்ரோசாப்ட் அதிரடி
Advertisement
Advertisement