போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு: 4 பேர் மீது வழக்கு
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் பகுதியில் விற்கப்பட்ட இடத்திற்கு போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, புதுசாரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்ராயன், 71; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ரெட்டியார்பாளையத்தில் உள்ள இடத்தை ஒருவருக்கு கடந்த 1995ம் ஆண்டு விற்பனை செய்துள்ளார்.
உழவர்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கம் எடுத்து பார்த்தபோது, அந்த இடம் வேறு சிலர் பெயரில் இருப்பதும், அவர்கள் சுப்புராயன் பெயரிலேயே போலி ஆதார், ஆவணங்கள் தயாரித்ததுடன், போலி கையெழுத்திட்டு இடத்தை பத்திரப்பதிவு செய்திருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி சுப்புராயன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, கோர்ட் உத்தரவின்படி, ரெட்டியார்பாளையம் போலீசார், போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்த புதுச்சேரியை சேர்ந்த உமா மகேஸ்வரி, ஷகிலா, ரம்யா, கணேசராமன் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
பட்டா கேட்டு முற்றுகை யிட்ட மக்கள்
-
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கண்டிப்பு - ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
-
வீரபாண்டி சித்திரை திருவிழா ஊர் பொங்கலுடன் நிறைவு
-
டாக்டர் கார் மீது கல்வீச்சு
-
கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு
-
கட்டுமானப் பொறியாளர்கள் மனு