வெயிலால் மீன்வரத்து குறைவு பாம்பன் மீனவர்கள் ஓய்வு

ராமேஸ்வரம்:கோடை வெயில் சுட்டெரிப்பதால், ராமேஸ்வரம் அருகே பாம்பனில், மீன்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் ஓய்வெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில், கோடை வெயில் சுட்டெரிப்பதால், மே மாதம் பாக் ஜலசந்தி கடல், மன்னார் வளைகுடா கடலில் நீரோட்டம், தட்பவெப்ப நிலை மாறுபடும்.
இதனால், மீன்கள் இடம்பெயர்கின்றன. இக்கால கட்டத்தில், மீன்கள் இனப்பெருக்கம் நடக்கிறது. இந்நிலையில், சில நாட்களாக பாம்பனில் இருந்து நாட்டுப்படகில், பாக்ஜலசந்தி கடலில், மீன்பிடித்த மீனவர்கள் வலையில், எதிர்பார்த்த மீன்வரத்து இன்றி நஷ்டத்துடன் கரை திரும்பினர்.
இதனால், மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதால், நேற்று காலை பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டா கேட்டு முற்றுகை யிட்ட மக்கள்
-
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கண்டிப்பு - ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
-
வீரபாண்டி சித்திரை திருவிழா ஊர் பொங்கலுடன் நிறைவு
-
டாக்டர் கார் மீது கல்வீச்சு
-
கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு
-
கட்டுமானப் பொறியாளர்கள் மனு
Advertisement
Advertisement