உலக டேபிள் டென்னிஸ்: சாதிப்பாரா மணிகா பத்ரா

தோகா: உலக டேபிள் டென்னிஸ் தொடரில் மணிகா பத்ரா, சத்யன் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் சாதிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கத்தார் தலைநகர் தோகாவில், உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இன்று முதல் வரும் மே 25 வரை நடக்கவுள்ளது. இந்தியா சார்பில் 11 பேர் பங்கேற்கின்றனர். ஆண்கள் ஒற்றையரில் சத்யன் ஞானசேகரன், மானவ் தாக்கர், மானுஷ் ஷா, அங்குர் பட்டாசார்ஜி களமிறங்குகின்றனர். பெண்கள் ஒற்றையரில் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, தியா, யாஷஸ்வினி பங்கேற்கின்றனர். இரட்டையர் பிரிவில் ஹர்மீத் தேசாய், அய்ஹிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி விளையாடுகின்றனர்.
உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவுக்கு 2 வெண்கலம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் ஒரு பதக்கம் கூட பெறவில்லை. இம்முறை இந்திய நட்சத்திரங்கள் பதக்கம் வென்று வரலாறு படைப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்
-
ஸ்ரீ சத்குருநாத முனிவரின் 106வது ஆண்டு குருபூஜை
-
முதியோருக்காக இயக்கப்படும் பேட்டரி கார் முறையாக இயங்காததால் அவதி
-
10ம் வகுப்பு தேர்வில் 93.26 சதவீதம் பேர் தேர்ச்சி 79 பள்ளிகள் 'சென்டம்'
-
முதல் முறையாக 100 சதவீதம் தேர்ச்சி; அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
-
பருவமழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு; 286 வன ஊழியர்கள் பங்கேற்பு
-
தேர்வு எழுதிய மாற்றுத்திறன் மாணவி- தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து பெற்றோர் மகிழ்ச்சி