வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி திருட்டு
கோவை :சிங்காநல்லுார் பகுதியில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி, பணம் திருடிச்சென்றவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
சிங்காநல்லுார், ஒண்டிப்புதுார், சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராஜகுமார்,48; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 11ம் தேதி, மதுரைக்கு சென்றார். இந்நிலையில், வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதாக, நேற்று முன் தினம் பக்கத்து வீட்டில் வசிப்பவர் போன் செய்தார்.
ராஜகுமார் வந்து பார்த்த போது, கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 16.5 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 15 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது. ராஜகுமார் சிங்காநல்லுார் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி, திருடர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காந்தி ஆசிரம அலுவலகம் முன் முன்னாள் ஊழியர் ஆர்ப்பாட்டம்
-
தோட்டத்து வீடுகளில் திருட்டு தொடர் சம்பவத்தால் மக்கள் பீதி
-
ராசிபுரம் வித்யா மந்திர் பள்ளி மாணவர் 497 மதிப்பெண் பெற்று சிறப்பிடம்
-
இடிக்கப்பட்ட கொடி பீடம் போக்குவரத்துக்கு இடையூறு
-
யோகா பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்
-
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி சாதனை
Advertisement
Advertisement