மாமனாரின் மண்டையை உடைத்த மருமகன்

அவிநாசி : கோவை, ஒண்டிப்புதுார், கண்ணன் நகரை சேர்ந்த மனோகர் 52, கண்ணம்மாள் 48, தம்பதியினர். இவர்கள் மகள் பிரியாவுக்கும், திருமுருகன்பூண்டி திருநீலகண்டர் வீதியைச் சேர்ந்த டெய்லர் சுரேஷூக்கும், கடந்த, ஐந்தாண்டுக்கு முன் திருமணம் நடந்தது. நான்கு வயதில் மகன் உள்ளார்.
சுரேஷுக்கும், அவருடன் வேலை பார்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை கண்டுபிடித்த பிரியா, மகளிர் போலீசாரிடம் கணவர் மற்றும் பெண் மீதும் புகார் அளித்தார். இதனால், கடந்த ஒரு வாரமாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இருப்பினும், தனது மகளை கணவருடன் சமாதானம் பேசி சேர்த்து வைக்க மனோகர், பிரியாவை அழைத்து கொண்டு, திருமுருகன்பூண்டிக்கு நேற்று வந்துள்ளார். ஏற்பட்ட தகராறில், பூட்டை எடுத்து மனோகர் தலையில், சுரேஷ் தாக்கினார். இதில், அவரின் மண்டை உடைந்ததால், அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில், திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
கல் குவாரிகளின் விதிமீறலை தடுக்காத 18 அதிகாரிகள் மீது வழக்கு பதிய உத்தரவு
-
கரூர் வட்டாரத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை
-
தாசில்நாயக்கனுாரில் மாடு மாலை தாண்டும் திருவிழா
-
ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டித்தர மக்கள் வேண்டுகோள்
-
நாமக்கல் எஸ்.கே.வி., பள்ளி சாதனை
-
கொசுவலை முறைகேடு: சி.பி.ஐ., விசாரணைக்கு கோர்ட் உத்தரவு * உயர்நீதிமன்றம் உத்தரவு