வாகனம் மோதி சிறுத்தை பலி

தேவதானப்பட்டி : தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டி கொடைக்கானல் ரோடு டம்டம் பாறை செல்லும் வழியில் 'புலிப்புடவு' காப்புக்காடு பகுதி உள்ளது.
நேற்று அதிகாலை ரோட்டை கடக்க முயன்ற 10 மாத பெண் சிறுத்தை குட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானது. அப்பகுதியினர் ரேஞ்சர் அன்பழகனுக்கு தகவல் தெரிவித்தனர்.
மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா, பண்ணைக்காடு கால்நடை டாக்டர் நவீன், ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை டாக்டர் விஜயராகவன் சிறுத்தை குட்டி உடலை உடற்கூராய்வு செய்தனர். அடையாளம் தெரியாத வாகனத்தை தேவதானப்பட்டி வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கட்டுமான பணிக்கு 'எம் சாண்ட்' பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை!
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?
-
உயில் அடிப்படையில் சொத்து வாங்கும் போது விசாரிக்க வேண்டியவை!
-
மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் கான்கிரீட்டை பயன்படுத்தலாமா?
-
பட்டா மாறுதலுக்கான கட்டணங்கள் விஷயத்தில் கவனம் தேவை!
Advertisement
Advertisement