நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் பெரியசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
திருமயம் அருகே தேக்காட்டூரில் 'பிள்ளையார் குளம்' நீர்நிலை உள்ளது. அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கலெக்டர், ஆர்.டி.ஓ.,திருமயம் தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: அது நீர்நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளதை அரசு தரப்பு உறுதி செய்துஉள்ளது. தாசில்தார் அளவீடு செய்யவேண்டும்.ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அளித்து, விளக்கமளிக்க வாய்ப்பளிக்க வேண்டும். சட்ட நடைமுறைகளை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதை 4 மாதங்களில் முடிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மெக்சிகோ கடற்படை கப்பல் விபத்தில் சிக்கியது; 22 பேர் காயம்
-
பின்லாந்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 5 பேர் பரிதாப பலி!
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!
-
இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்; வெளிநாடுகளுக்கு குழு அனுப்ப ஏற்பாடு
-
தருமபுரம் ஆதினத்தில் குருபூஜை விழா; வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் ஆதினம்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
Advertisement
Advertisement