பா.ஜ., தலைவருடன் சந்திப்பு; போலீஸ் ஏட்டு இருவர் மாற்றம்!

திருப்பூர்: யூனிபார்மில் சென்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த போலீஸ் ஏட்டு இருவர் ஆயுத படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
திருப்பூரில் பா.ஜ., சார்பில் தேசிய கொடி பேரணி இரு நாட்களுக்கு முன் நடந்தது. இதில் பங்கேற்க பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருப்பூர் வந்திருந்தார்.
அப்போது, அவரை ஹோட்டலில் யூனிபார்மில் சென்று அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் சேர்ந்த போலீஸ் ஏட்டு மந்திரம், 42, மற்றும் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் சேர்ந்த போலீஸ் ஏட்டு சின்னசாமி, 40 ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர்.
போலீஸ் ஏட்டு இருவரையும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (1)
மணி - ,
18 மே,2025 - 13:48 Report Abuse

0
0
Reply
மேலும்
-
காஷ்மீரில் பாக். ஏவி வெடிக்காத 42 வெடிகுண்டுகள்: ராணுவம் பாதுகாப்பாக அழிப்பு
-
நகைக்காக சினிமா பாணியில் ஒரு கொலை; மாமியாரை கொன்ற மருமகள் கைது
-
பீஹாரில் நிதீஷ்குமார் கிராமத்திற்கு செல்ல முயன்ற பிரசாந்த் கிஷோர் தடுத்து நிறுத்தம்
-
பிரிட்டனில் மேயர் பதவிக்கு தேர்வான உ.பி., பொறியாளர்!
-
நக்சல் பாதிப்பு பகுதியில் முதல் கால்நடை மருத்துவமனை: சத்தீஸ்கரில் திறப்பு
-
கொலை முயற்சி வழக்கு: வங்கதேச நடிகை நுஸ்ரத் பரியா கைது
Advertisement
Advertisement