தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்; மத்திய அரசின் தொழிலாளர் நலச் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, ஜூலை 9ம் தேதி, நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனை விளக்கி, மத்திய அரசுக்கு, தொழிற்சங்கங்கள் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை அறிவிக்கும் வகையில், குமரன் சிலை முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

எல்.பி.எப்., மாவட்ட துணை தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.), குமார் (சி.ஐ.டி.யு.), கோபால்சாமி (ஐ.என்.டி.யு.சி.), முத்துசாமி (எச்.எம்.எஸ்.) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சக்திவேல், முத்துக்கிருஷ்ணன், சதீஸ்குமார் உட்பட பலர் பேசினர். இதில் தொழிற்சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement