நெல்லிக்குப்பத்தில் கொடிகம்பம் அகற்றம் 

நடுவீரப்பட்டு : தமிழக முழுதும் நெடுஞ்சாலை மற்றும் பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அரசியல் கட்சிகள், சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டுமென, ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி, கடலுார் அடுத்த நத்தப்பட்டு-மேல்பட்டாம்பாக்கம் வரை சாலையில் இடையூராக இருந்த கட்சி கொடி கம்பங்கள், பொதுநல அமைப்புகளின் கொடிகம்பங்களை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் பவித்ரா,நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் அகற்றும் பணி நேற்று நடந்தது.

Advertisement