செஞ்சி சங்கராபரணி ஆற்றில் திடீர் வெள்ளம்

செஞ்சி : செஞ்சி சங்கராபரணி ஆற்றில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், மேல்களவாய் தரைப்பாலத்தை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்றனர்.

செஞ்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை 4:00 மணி முதல் தொடர் மழை பெய்தது. சங்கராபரணி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியிலும், காப்புக்காடுகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சங்கராபரணி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக தண்ணீர் செல்லாமல் இருந்த மேல்களவாய் தரைப்பாலத்தில் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றது. இந்த வழியாக சென்ற பொது மக்கள் அச்சத்துடன் தரைப்பாலத்தை கடந்து சென்றனர்.

Advertisement