பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு; அண்ணாமலை கண்டனம்!

சென்னை: "தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் குற்றங்களிலும் தொடர்கிறது" என முன்னாள் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: அரக்கோணம் திமுக இளைஞரணி நிர்வாகியால் கல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கை, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
அரக்கோணம் கல்லூரி மாணவி, தான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார். மாணவி கொடுத்த புகாரின் கீழ், கடந்த 10ம் தேதி அன்றே வழக்குப் பதிவு செய்ததாகக் கூறும் போலீசார், இதுவரை, தி.மு.க., இளைஞரணி நிர்வாகியைக் கைது செய்யவில்லை. மாறாக, மாணவி போலீசாரிடம் கொடுத்த ஆதாரங்களை, தி.மு.க.,வினர் சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகவும் மாணவி குற்றம் சாட்டியிருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் தாக்குதலுக்கு ஆளான வழக்கில், மாணவி குறித்த தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டு அச்சுறுத்த முயற்சித்த தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் குற்றங்களிலும் தொடர்கிறது என்பதையே இது காட்டுகிறது.
இத்தகைய சூழலில், தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தி.மு.க., அரசின் கடமை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.




மேலும்
-
மின் கட்டண உயர்வில் தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு தேவை கூட்டமைப்பினர் வலியுறுத்தல்
-
அடிப்படை வசதி செய்து தரக்கோரி சபாநாயகரை முற்றுகையிட்ட மக்கள்
-
சோதனை சாவடியில் ரூ.1.43 லட்சம் பறிமுதல்
-
மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் நடிகர் ரவி மனைவி மனு
-
ஜோஸ் ஆலுக்காஸில் திருமண நகை திருவிழா
-
விதிகளை பறக்க விட்ட மல்லாக்கோட்டை குவாரி உரிமையாளரை காப்பாற்ற போராடிய அதிகாரிகள்