மனைவி, மாமியாரை தாக்கிய கணவர் மீது வழக்கு
தேனி: கடமலைக்குண்டு மூலக்கடை ஆலந்தளிர் செந்தாமரைக்கண்ணன் 43. ஆக்டிங் டிரைவர். இவரது மனைவி திருமேனி 35. இருவருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவர் மது குடித்திவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதனால் மனைவி கோபித்துக் கொண்டு, 7 ஆண்டுகளுக்கு முன்,தனது தாய் பவுன்தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து தங்கினார். தேனியில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்த கணவர் தகராறில் ஈடுபட்டார். இதனால் மே 20ல் கணவர் வேண்டாம் என திருமேனி, முடிவு செய்து, ஆலந்தளிருக்கு சென்று வீட்டில் உள்ள தனது பொருட்களை எடுத்துக் கொண்டு தேனி வந்துவிட்டார்.இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் தேனி வந்து மனைவி திருமேனியை தாக்கினார். மனைவி திருமேனி புகாரில் கணவர் செந்தாமரைக்கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க தடை விதிப்பு!
-
நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி? வெளியானது தகவல்
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சலைட் சுட்டுக்கொலை
-
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போலீஸ் கமிஷனர்: உள்துறை செயலாளரிடம் சவுக்கு சங்கர் புகார்
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்தி பரப்பும் காங்கிரஸ்; பா.ஜ., குற்றச்சாட்டு
-
முத்தரையர் 150வது சதய விழா கொண்டாட்டம்
Advertisement
Advertisement