இரவில் ரோடு மறியல்
திருமங்கலம்: கள்ளிக்குடி சின்ன உலகாணியை சேர்ந்தவர் பால்பாண்டி 45. இவர் நிலம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக தருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்து தலைமறைவானார். இவரது உறவினர் உன்னிப்பட்டி முத்துப்பேச்சி 35. பால்பாண்டி வீட்டின் மாடியில் வசிக்கிறார். இவரும் பால்பாண்டியிடம் பணம் கொடுத்து ஏமாந்தார். போலீசில் புகார் செய்த நிலையில் பால்பாண்டி மனைவி பூமாரி, 'எங்கள் வீட்டில் இருந்து கொண்டே எங்கள் மீதே புகார் செய்கிறாயா. உடனே வீட்டை காலி செய்' எனக்கூறி தகராறில் ஈடுபட்டதோடு விஷம் குடித்து மயங்கினார். பயந்துபோன முத்துப்பேச்சியும் விஷம் குடித்தார்.
இருவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையறிந்த கிராமத்தினர் மருத்துவமனையில் திரண்டனர். பின்பு தாலுகா அலுவலகம் முன்பு நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்தனர். இந்த ரோட்டில் 35 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.
மேலும்
-
உலகில் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா; முதலீட்டாளர்கள் மாநாட்டில் மோடி பெருமிதம்!
-
அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க தடை விதிப்பு!
-
நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி? வெளியானது தகவல்
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சலைட் சுட்டுக்கொலை
-
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போலீஸ் கமிஷனர்: உள்துறை செயலாளரிடம் சவுக்கு சங்கர் புகார்
-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்தி பரப்பும் காங்கிரஸ்; பா.ஜ., குற்றச்சாட்டு