பேனர் வைத்தவர் மீது வழக்கு

புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் அனுமதியின்றி பேனர் வந்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டு, சாலைகளில் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் முத்தியால்பேட்டை, பாரதி வீதி- எஸ்.வி.பட்டேல் சாலை சந்திப்பில் போக்குவரத்திற்கு இடையூராகவும், நடைபாதையை ஆக்கிரமித்தும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

போலீசார் அளித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் ,பேனர் வைத்திருந்த கோவிந்தசாலை, அந்தோனியார் கோவில் வீதியை சேர்ந்த வெற்றிவேல், 34; மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement