பிரம்மோற்சவ விழா துவங்கியது திருநள்ளாறில் 6ம் தேதி தேரோட்டம்

காரைக்கால் : காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு தேர் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
காரைக்கால் திருநள்ளாறு பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார்.
நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.
கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடக்கும். இதற்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து விநாயகர் உற்சவம் சுப்ரமணிய உற்சவம் அடியார் நால்வர் புஷ்ப பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
வரும் 6ம் தேதி ஐந்து தேரோட்டம் நடக்கிறது. 7ம் தேதி தங்க காக வாகனம் வீதியுலா, 8ம் தேதி தெப்பல் திருவிழா நடக்கிறது. இதனையொட்டி தேரோட்டத்திற்கு தேர் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவை, நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைவு
-
ராட்சத குழாய் உடைப்பால் 20 அடி உயரம் பீய்ச்சி அடித்த குடிநீர்; போக்குவரத்து முடக்கம்
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக்., பொருளாதாரம் மீதும் தாக்குதல்; உலக வங்கியை அணுக இந்தியா முடிவு
-
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றமா; தொடக்கக் கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பு
-
மஹா.,- சத்தீஸ்கர் எல்லையில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக் கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
மாரடைப்பில் சரிந்த பஸ் ஓட்டுநர்; சமயோசிதமாக செயல்பட்டு 50 பயணிகளை காப்பாற்றிய கண்டக்டர்
Advertisement
Advertisement