மாயமான வழிகாட்டி பலகை சுற்றுலா பயணியர் அதிருப்தி

வால்பாறை : வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரொட்டிக்கடை மூன்று ரோடுகள் சந்திப்பு பகுதியில், பெரிய அளவிலான வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது. இதனால், வால்பாறை வருவோர் எளிதில் வழித்தடம் அறிந்து செல்ல முடிந்தது.
இந்நிலையில், ரொட்டிக்கடை, பழைய வால்பாறை, மாதா கோவில் சந்திப்பு உள்ளிட்ட மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில் இருந்த வழிகாட்டி பலகை அப்புறப்படுத்தப்பட்டு, சிறிய அளவிலான வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் வால்பாறைக்கு புதியதாக வருவோர் வழித்தடம் தெரியாமல் தவிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
ஆயிரக்கணக்கான வாகனங்கள் வால்பாறைக்கு வந்து செல்லும் நிலையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட வழிகாட்டி பலகை மாயமானதால், சுற்றுலா பயணியர் செல்லும் வழி தெரியாமல் தவிக்கின்றனர். எனவே, சுற்றுலா பயணியர் நலன் கருதி வால்பாறையில் முக்கிய ரோடுகள் சந்திக்கும் இடங்களில், பெரிய அளவிலான வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
மேலும்
-
கோவை, நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைவு
-
ராட்சத குழாய் உடைப்பால் 20 அடி உயரம் பீய்ச்சி அடித்த குடிநீர்; போக்குவரத்து முடக்கம்
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக்., பொருளாதாரம் மீதும் தாக்குதல்; உலக வங்கியை அணுக இந்தியா முடிவு
-
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றமா; தொடக்கக் கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பு
-
மஹா.,- சத்தீஸ்கர் எல்லையில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக் கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
மாரடைப்பில் சரிந்த பஸ் ஓட்டுநர்; சமயோசிதமாக செயல்பட்டு 50 பயணிகளை காப்பாற்றிய கண்டக்டர்