வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு தீயணைப்புத் துறையினர் மீட்பு

திருவெண்ணெய் நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து அப்புறப்படுத்தினர்.

திருவெண்ணெய்நல்லுார் கீழ்மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன், 40; கட்டட தொழிலாளி. இவரது வீட்டில் நேற்று பகல் 1:00 மணிக்கு 6 அடி நீள நாக பாம்பு புகுந்தது.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டிற்குள் புகுந்திருந்த நாக பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.

Advertisement