பாக்., செயலால் தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு: மத்திய வெளியுறவு அமைச்சகம்

புதுடில்லி: இருநாட்டு நட்பு மற்றும் நல்லெண்ணம் உள்ளிட்ட கொள்கைகளை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளதால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பகல்ஹாம் சம்பவத்தை தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறி வருகிறது.
இந்நிலையில் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: பொறியியல் நுட்பங்கள், காலநிலை மாற்றம் மற்றும் பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட சூழ்நிலைகள் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதை கட்டாயமாக்கியுள்ளன. பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைகளை பாகிஸ்தான் தடுத்து வருகிறது.
ஒப்பந்தத்தின் முன்னுரையில், அது நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் உணர்வில் ஏற்படுத்தப்பட்டதாகக் கூறுகிறது. இந்தக் கொள்கைகள் அனைத்தும் உண்மையில் பாகிஸ்தானால் கைவிடப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் இடைவிடாத எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஒப்பந்தத்தை அதன் விதிகளின்படி பயன்படுத்திக் கொள்ளும் நமது திறனில் தலையிடுகிறது.
அடிப்படை நில நிலைமைகள் முற்றிலும் மாறியிருக்கும் போது ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது இயற்கையானது மற்றும் இந்தியாவின் உரிமைக்கு உட்பட்டது.1950கள் மற்றும் 1960களின் முற்பகுதியில் இருந்த பொறியியல் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த ஒப்பந்தம் குறித்து 21 ஆம் நூற்றாண்டிற்கு ஏற்றவாறு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும்
-
இந்தியாவுக்கு 2 வெண்கலம் * உலக துப்பாக்கிசுடுதலில்...
-
இந்திய ஜோடி இரண்டாவது இடம்
-
பெங்களூரு கேப்டனுக்கு ரூ. 24 லட்சம் அபராதம்
-
இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன்: சுதர்சன், அர்ஷ்தீப் சிங் அறிமுக வாய்ப்பு
-
பீஹாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை
-
காவல்துறை அத்துமீறல்கள்: முதல்வருக்கு தமிழக பா.ஜ., வலியுறுத்தல்