டீ கடைக்காரரை தாக்கிய ரவுடிகள் இருவர் கைது
அயனாவரம், :அயனாவரம், பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன், 56. இவர், அதே பகுதியில் உள்ள கொன்னுார் நெடுஞ்சாலையில், டீ கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, இவரது டீ கடைக்கு வந்த இருவர், டீ குடித்துவிட்டு சிகரெட் வாங்கி புகைத்துள்ளனர். பின், பணம் கொடுக்காமல் சென்றதால், நாராயணன் தடுத்து நிறுத்தியுள்ளார்.
ஆத்திரமடைந்த இருவரும், 'எங்களிடமே பணம் கேட்கிறாயா... நாங்கள் ரவுடி' எனக் கூறி, நாராயணனை சரமாரியாக தாக்கி விட்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பினர்.
புகாரின்படி, அயனாவரம் போலீசார் விசாரித்து, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய, அயனாவரம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராகவேந்திரன், 22, தனுஷ், 19, ஆகிய இருவரையும் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் கனமழை, சூறாவளி காற்று; விமான சேவை, மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்
-
வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு
-
இலவச இதய மருத்துவ முகாம்
-
விஜய கரிசல்குளம் அகழாய்வில் பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்
-
'கல்லுாரி கனவு' விழிப்புணர்வு மாரத்தான்
Advertisement
Advertisement