ரூ.4,800 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்

புதுடில்லி:கிட்டத்தட்ட 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, கடந்த வாரத்தில் இந்திய பங்குச் சந்தையில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் விற்று, முதலீட்டை திரும்ப பெற்று உள்ளனர். நடப்பு மே மாதத்தில், இதுவரை பதிவான மொத்த முதலீடுகள் 13,835 கோடி ரூபாயாக உள்ளது.


முந்தைய வாரத்தில், இது 18,620 கோடி ரூபாயாக பதிவாகி இருந்தது. இதன்படி, கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும், 4,800 கோடி ரூபாய் முதலீடு வெளியேறியது. அதிகபட்சமாக மே 21ம் தேதி, 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுஉள்ளனர்.

Advertisement