கிணற்றில் விழுந்த நாய் பத்திரமாக மீட்பு
பெருங்களத்துார், பழைய பெருங்களத்துார், குறிஞ்சி நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கிணறு, அதே பகுதியில் உள்ளது.
நேற்று, அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய், அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடியது.
இதை பார்த்த கிருஷ்ணமூர்த்தி, நாயை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. இதையடுத்து, தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு துறையினர் வந்து, 50 அடி கிணற்றுக்குள் இறங்கி, ஒரு மணி நேரம் போராடி நாயை உயிருடன் மீட்டனர். வாயில்லா ஜீவனை மீட்ட தீயணைப்பு துறையினருக்கு, அப்பகுதிவாசிகள் பாராட்டு தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் கனமழை, சூறாவளி காற்று; விமான சேவை, மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்
-
வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு
-
இலவச இதய மருத்துவ முகாம்
-
விஜய கரிசல்குளம் அகழாய்வில் பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்
-
'கல்லுாரி கனவு' விழிப்புணர்வு மாரத்தான்
Advertisement
Advertisement