வாகன தணிக்கையில் ரூ.1.22 லட்சம் அபராதம்

பள்ளிப்பாளையம் :ஈரோடு துணை போக்குவரத்து ஆணையர் உத்தரவுப்படி, குமாரபாளையம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள், பள்ளிப்பாளையம் அருகே, எஸ்.பி.பி., காலனி பகுதியில், நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, 11 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், அதிக பாரம் ஏற்றிய, இரண்டு வாகனங்கள், மொபைல் போன் பேசியபடி வாகனம் ஓட்டிய, ஆறு பேர், ஹெல்மெட் அணியாமல் சென்ற, ஏழு பேர், லைசென்ஸ் இல்லாமல் சென்ற, மூன்று பேர் என, 18 பேருக்கு, ஒரு லட்சத்து, 22,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement