மூத்த மகள் காதல் திருமணம் பெற்றோர், தங்கை தற்கொலை

மைசூரு: மூத்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால், வேதனை அடைந்த தந்தை, தாய், சகோதரி ஆகிய மூவரும், நீர்த்தேக்கப்பகுதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டே அணையின் நீர்த்தேக்க பகுதியில் பூதனுார் கிராமத்தில் இருசக்கர வாகனம் நீண்ட நேரம் நின்றிருந்தது. இதை அங்குள்ளவர்கள் பார்த்தனர். வாகனம் அருகில் மூன்று ஜோடி காலணிகள் இருந்தன.
அதிர்ச்சி அடைந்த அவர்கள், எச்.டி.கோட்டே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், இரு சக்கர வாகனத்தில் கடிதம் இருந்ததை பார்த்தனர். கடிதத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த மஹாதேவ சுவாமி, 55, தன் மனைவி மஞ்சுளா, 42, மகள் ஹர்ஷிதா, 16, ஆகியோருடன் நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருந்தது.
மஹாதேவசுவாமி, மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் அர்பிதா, 20, சில நாட்களுக்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேறி, காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் வேதனை அடைந்து இவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும்
-
டில்லியில் கனமழை, சூறாவளி காற்று; விமான சேவை, மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்
-
வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு
-
இலவச இதய மருத்துவ முகாம்
-
விஜய கரிசல்குளம் அகழாய்வில் பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்
-
'கல்லுாரி கனவு' விழிப்புணர்வு மாரத்தான்