சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்; கட்டுப்படுத்த தேவை உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை

மாவட்டத்தில் நகர் முக்கிய ரோடுகள்,நான்கு வழி சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகளில் கூட சுதந்திரமாக உலா வரும் மாடுகள் விபத்தில் சிக்கி அவ்வப்போது உயிரைவிடுகின்றன. சாலையோரம் கொட்டப்படும் குப்பையை கிளறி பாலிதீன் துணிகள் போன்றவற்றை உட்கொள்கின்றன.

இதனால் மாடுகளுக்கு பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படுகிறது. குறிப்பாக நகர் புறங்களில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லாததாலும், உணவு பற்றாக்குறையாலும் அதன் உரிமையாளர்கள் மாடுகளை கண்டு கொள்வதில்லை. அவை நடுரோட்டில் கூட்டமாக திரிவதால் வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.

கை, கால் இழப்பு முதல் உயிரிழப்பு வரை நிகழ்கிறது. உள்ளாட்சி நிர்வாகங்கள் ரோட்டில் சுற்றி திரியும் மாடுகளை பறிமுதல் செய்கின்றனர். உரிமையாளர்கள் வரும் போது எச்சரித்து மாடுகளை ஒப்படைக்கின்றனர்.

இருப்பினும் உரிமையாளர்கள் மாடுகளை முறையாக பராமரிக்காமல் மீண்டும் ரோடுகளில் திரியவிடுகின்றனர்.

கால்நடைகளை முறையாக பராமரிக்காமல் ரோடுகளில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது கடு மையான எடுக்க நடவடிக்கை வேண்டும். இதோடு கால்நடைகளையும் அதனால் ஏற்படும் விபத்துகளையும் தடுக்க வேண்டும்.

Advertisement