டிரைவர், கண்டக்டர் மீது தாக்கு

நத்தம் : நத்தம் பஸ் ஸ்டாண்ட் வந்த பஸ்சை டிரைவர் ஆனந்த் ஓட்டினார். நத்தம்-புளிக்கடை நிறுத்தத்தில் பயணிகளை இறக்கியபோது அந்த வழியாக சென்றவர்கள் பஸ்சின் முன்பு நின்று ரகளையில் ஈடுபட்டனர். ஒருவர் பஸ்சின் மேல் ஏறி கண்ணாடியை உடைக்க முயன்றார். ஆத்திரமடைந்த அந்த கும்பல் டிரைவர், கண்டக்டர் சஞ்சய் பிரசாத்தை தாக்கினர். நத்தம் போலீசார் 8 பேரை பிடித்து விசாரித்தார்.

Advertisement