சித்ரா பவுர்ணமி முளைப்பாரி ஊர்வலம்

வடமதுரை : அய்யலுார் கெங்கையூர் மண்டபத்தோட்டத்தில் சக்திமுத்துமாரியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 3 நாட்கள் உற்ஸவ திருவிழா நடந்தது.

ஆபரணப் பெட்டி அழைப்புடன் துவங்கிய விழாவில் கரகம் பாலித்தல், பூக்குழி , அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், கருப்பசுவாமிக்கு நேர்த்திக்கடன் , முன்மண்டபம் பார்த்தல் என பாரம்பரிய வழிபாடுகள் நடந்தன.முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பூஞ்சோலை செல்லுதலுடன் விழா நிறைவடைந்தது.

Advertisement